SSLC / 10th Tamil - Book Back Answers - Unit 2 - Full Guide
Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at samacheerkalvi.net
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
2 Mark Questions: Answer briefly
3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 2:
I. திறன் அறிவோம்
அ) பலவுள் தெரிக.
ஆ) குறு வினா
இ) சிறு வினா
உயிராக நான், ஆறாக நான், குளமாக நான்
- நெருப்புப் பந்து போல புவி உருவாகியது.
- தொடர் மழையால் பூமி மூழ்கியது.
- உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் உள்ள ஐம்பூதங்கள் தோன்றின.
ஈ) நெடு வினா
1. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
முன்னுரை:
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.
காற்று மாசுபாடு :
குப்பைகள், நெகிழிப் பைகளை எரிப்பதால், மிகுதியாகப் பட்டாசு வெடிப்பதால், குளிர்சாதனங்களை மிகுதியாகப் பயன்படுத்துவதால் காற்று மாசுபடுகிறது.
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:
அதிக மரங்களை வளர்க்க வேண்டும். பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மின்னாற்றால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும். உயரமான புகைபோக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
முடிவுரை:
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் கண்டோம்
2. 'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
முன்னுரை:
பிரபஞ்சன் இயற்றிய சிறுகதை பிரும்மம் இக்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் காண்போம்.
முருங்கை வளர்க்க ஆசை :
பிற உயிர்களைத் தம் உயிர்போல நேசிக்கும் ஒரு குடும்பம் புது வீட்டிற்குக் குடிபோனது.அந்த வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது. அங்கு என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பசு வளர்க்கலாம், காய்கறிச் செடிகள் வளர்க்கலாம் எனப் பல திட்டங்கள். கடைசியில் முருங்கை மரம் வளர்க்கலாம் என்று அப்பா முடிவு செய்தார்.
அப்பாவும் முருங்கையும் :
அங்கு முருங்கை நட்டு வளர்த்தனர். ஒவ்வொருநாளும் முருங்கையின் வளர்ச்சியைக் கண்டு ரசித்தனர் . அன்று முதல் அம்மரம் அவர்கள் வீட்டில் ஓர் உறுப்பினராக மாறியது . அனைவரும் பயன்பெற்றனர் மகிழ்ச்சியாக இருந்தனர் . காற்றில் முருங்கை சாய்ந்தது. மிகவும் வருந்தினர். மீண்டும் முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்
முடிவுரை:
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் கண்டோம்
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து
விடித்தும் விடியாத காலைப் பொழுதாக
வினைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
துந்த இனந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.
விடைக்குறிப்பு:
திரண்ட கருத்து : காற்றைப் பாராட்டல்
மோனை நயம்: மலர்ந்தும் - மலராத
எதுகை நயம்: நதியில் - பொதிகை
இயைபு நயம்: வண்ணமே - அன்னமே - மன்றமே
அணி நயம்: உவமையணி
II. மொழியை ஆள்வோம்
அந்த இடம்
காற்றே ! வா
உன்னைப் பாடாமல்
இருக்க முடியாது
ஏனெனில்
பாட்டின் மூல ஊற்றே
நீதான்
.............
.............
பொய்கையிடம் போனால்
குளிர்ந்து போகிறாய்
பூக்களைத் தொட்டால்
நறுமணத்தோடு வருகிறாய்
புல்லாங்குழலில் புகுந்தால்
இசையாகிவிடுகிறாய்
எங்களிடம்
வந்தால் மட்டுமே
அழுக்காகி விடுகிறாய்
மரங்களின்
ஊமை நாவுகள்
உன்னிடம் மட்டுமே
பேசுகின்றன
கடல் அலைகள்
உன்னோடு மட்டுமே
குதித்துக் கும்மாளமிடுகின்றன
வயலின் பச்சைப் பயிர்கள்
நீ வந்தால் மட்டுமே
ஆனந்த நடனம்
ஆடுகின்றன
நீ என்ன குதூகலமா?
கொண்டாட்டமா?
கோலாகலமா?
நெடுநாட்களாகவே
எனக்கொரு சந்தேகம்
விளக்குகளிலிருந்து
பறிக்கும் சுடர்களை
பூக்களிலிருந்து
திருடும் நறுமணத்தை
வீணையிலிருந்து
கவர்ந்த இசையை
எங்கே கொண்டு போய்
ஒளித்து வைக்கிறாய்?
- அப்துல் ரகுமான்.
ஆ ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) இயற்கை – செயற்கை
செயற்கையை விட இயற்கை சிறந்தது
ஆ) கொடு - கோடு
கொடுப்பதற்குக் கோடு இடக் கூடாது
இ) கொள் - கோள்
கோள்களை அறிந்து கொள்
ஈ) சிறு - சீறு
சிறு பாம்பும் சீறும்
உ) தான் - தாம்
தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்
ஊ) விதி - வீதி
அவன் விதியால் வீதிக்கு வந்தான்
இ) மொழி பெயர்ப்பு
ஈ) செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
உ) வாழ்த்து மடல் எழுதுக.
ஊ) பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.
பாரதியின் வசன நடை - சிட்டுக்குருவி
சிறிய தானியம் போன்ற மூக்கு, சின்னக் கண்கள்;சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து: அழகிய மரங்கள் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு: கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தால் ஆகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை : துளித்துளி கால்கள்: இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்; இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண். - இதுபோன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசன நடையில் எழுதுக.
முயல்: சிறிய கண்கள்; சின்னத் தலை: சிறிய மூக்கு; நீண்ட காதுகள்: அழகிய வெண்மை பட்டு போர்த்த வயிறு: துளித்துளி கால்கள்: சாம்பல் நிறத்தால் ஆகிய பட்டு போர்த்த முதுகு: தத்தித் தாவி குதித்து ஓடிடும்; எங்கள் வீட்டு முயல் குட்டி.
III. மொழியோடு விளையாடு
அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும் - நறுமணம்
2) பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும். - புதுமை
3) இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. - காற்று
4) நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். - விண்மீன்
5) ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம். - காடு
ஆ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது; வாடைக் காற்று வீசியது.
காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
மொட்டின் வருகை
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்துசென்று மலர்களில் அமர்கின்றன.
மிதக்கும் வாசல்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
உயிர்ப்பின் ஏக்கம்
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்
நீரின் சிலிர்ப்பு
6. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம்.
வனத்தின் நடனம்
இ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
இயற்கையைச் சுவாசித்தோம்
இடர்கள் இன்றி இயல்பானோம்
இயற்கையான மரங்களை வீழ்த்தி
இயற்கையை அழித்ததனால்
உயிர்வாழத் தூய உயிர்வளி இல்லை
இனி உயிர்வாழ உயிர்வளியை
முதுகில் சுமக்கும் நிலைவருமே.
IV. செயல் திட்டம்
அ) அகராதியில் காண்க
V. நிற்க அதற்குத் தக:
அ) வானொலி அறிவிப்பு
இ) படிப்போம்; பயன்படுத்துவோம்!
Storm - புயல்
Land Breeze - நிலக்காற்று
Tornado – சூறாவளி
Sea Breeze -கடற்காற்று
Tempest – வன்புயல்
VI. அறிவை விரிவு செய்
அ) பணி வாய்ப்பு வேண்டி தன்விவரப் படிவத்தை நிரப்புதல்
1. பெயர். : கவின்
2. பாலினம் : ஆண்
3. பிறந்த நாள் மற்றும் வயது. : 16-03-2010 / 14
4 தேசிய இனம் : இந்தியன்
5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : சேதுராமன்
6. வீட்டு முகவரி. : 17/45, பாரதி நகர், தஞ்சை
7. தொலைபேசி /அலைபேசி எண் : 9443740120
8. 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்: 450/500
9. தாய்மொழி : தமிழ்
10. பயின்ற மொழிகள். : ஆங்கிலம், இந்தி
11. தட்டச்சு. : முதுநிலை தமிழ்
12. கணினி : MS ,Excel
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மைையென உறுதிகூறுகிறேன். தங்கள்
நிறுவனத்தில் ...எழுத்தர்...பணியினைத் தந்தால் எனது பணியைச் சிறப்பாகவும் உண்மைையாாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
ஆ) உங்கள் கிரமத்திற்கு நூலக வசதி வேண்டி பொதுத் துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.
செ.தமிழரசன்,
50, அன்னை இல்லம்,
காந்தி தெரு,
பூம்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் 625 001.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.
ஐயா,
பொருள்: நூலக வசதி வேண்டுதல்-சார்பு.
வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள் தோறும் சென்று வருகின்றோம்.
எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.
Website Create & Answer
P.Sivasamy,M.A,B.Ed
kalviArts Youtube,
www.kalvikavi.com
0 Comments:
Post a Comment